போர்க்குற்ற விசாரணையை இழுத்தடித்தால் கடும் விளைவுகள்- இலங்கைக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையர் எச்சரிக்கை

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், இலங்கை தன் மீதான போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து உரிய, விரைவான, பாரபட்சமற்ற விசாரணையை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணைய உறுப்பு நாடுகள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
எனவே இந்த விசாரணையை காலம் தாழ்த்தவோ அல்லது இழுத்தடிக்கவோ இலங்கை முயற்சித்தால், அதன் மீது சர்வதேச அளவில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
இலங்கை அரசு ஏற்கனவே தானாக முன்வந்து நடத்திய உள்நாட்டு அளவிலான விசாரணை ஒரு தோல்வியாகும். வெளிப்படை இல்லாத அந்த விசாரணை குறித்த விவரம், அறிக்கை வெளியிடப்படவில்லை. ஒருவர் கூட அந்த விசாரணைக்குப் பின்னர் தண்டிக்கப்படவில்லை.
இதே போல மீண்டும் மீண்டும் நடக்க இலங்கை முடிவு செய்தால், நினைத்தால், சர்வதேச சமுதாயம் ஒருங்கிணைந்து இலங்கைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் நிலை உருவாகும் என்று தெரிவிக்க விரும்புகிறேன். மேலும், ஐ.நா. மனித உரிமை ஆணையமும் இதுகுறித்து தீவிரமாக பரிசீலிக்கும் என்றும் நவி பிள்ளை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications