முல்லைப் பெரியாறு: மதிமுக நேரடியாகக் கிளர்ச்சியில் இறங்கும்! - வைகோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட கேரள அரசு தொடர்ந்து முயன்றால் மதிமுக நேரடி கிளர்ச்சியில் இறங்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

முல்லைப் பெரியாறு பிரச்னையில் உண்மைக்கு மாறான பொய்ச் செய்திகளைப் பரப்புவதையே கேரள அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

பென்னி குயிக் கட்டிய அணையைச் சேதப்படுத்த முயன்றாலோ, புதிய அணையைக் கட்ட முயன்றலோ, கேரளத்துக்குச் செல்கின்ற அனைத்துப் பாதைகளையும் மறித்து தமிழகம் பொருளாதார முற்றுகை போட நேரிடும் என்று கேரள அரசுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுவிக்க வேண்டும்.

புதிய அணையை கேரள அரசு அமைக்குமானால், பள்ளத்தில் அமையப் போகும் அந்த அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கவே முடியாமல் போய்விடும்.

உச்ச நீதிமன்றம் அமைத்த இரண்டு நிபுணர் குழுக்களும் முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது என்று திட்டவட்டமாக அறிக்கை சமர்ப்பித்துள்ளன.

இந்தியாவின் ஒருமைப்பாட்டில் உண்மையிலேயே மத்திய அரசுக்கு அக்கறை இருக்குமானால், கேரள அரசின் அக்கிரமமான போக்கைத் தடுத்தாக வேண்டும்.

கேரள அரசு தமிழகத்துக்கு விரோதமாகச் செயல்பட முனைந்தால் மதிமுக நேரடியாகக் கிளர்ச்சியில் ஈடுபடும்," என்று அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+