தனியார் கேபிள் நிறுவனங்களை அரசுடமையாக்குக: தமிழக அரசுக்கு அர்ஜுன் சம்பத் கோரிக்கை
சென்னை: அரசு கேபிள் டிவியைத் துவங்குவதற்கு முன்பு தற்போதுள்ள தனியார் கேபிள் நிறுவனங்களை அரசுடமையாக்க வேண்டும் என்று தமிழக அரசை இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
தமிழகத்தில் விரைவில் அரசு கேபிள் டிவி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவி்க்கப்பட்டது. ஆனால் எம்.எஸ்.ஓ.க்கள் அரசு கட்டுப்பாட்டில் இருந்தால் தனியார் நிறுவனங்கள் அரசு கேபிள் டிவிக்கு போட்டியாக செயல்படும். அவ்வாறு நடந்தால் தன் வசம் உள்ள கட்டண சேனல்களை தனியார் நிறுவனங்கள் நிச்சயமாக அரசு கேபிள் டிவிக்கு கொடுக்கமாட்டார்கள்.
இதனால் அரசு கேபிள் டிவிக்கு நஷ்டம் தான் ஏற்படும். மேலும், இந்த தொழில் போட்டியில் சிக்கித் தவிக்கப் போவது பொதுமக்கள் தான்.
எனவே, அரசு கேபிள் டிவியைத் துவங்கும் முன் தமிழக அரசு தனியார் கேபிள் நிறுவனங்களை அரசுடமையாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு செய்வதால் குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி பார்க்கலாம் என்று அதில் கூறியுள்ளார்.