முதியோர் உதவித் தொகை: வீடு வீடாக விசாரணை துவக்கம்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பல்வேறு உதவித் தொகை கேட்டு பெறப்பட்ட 57 ஆயிரம் மனுக்கள் மீது நேரடி விசாரணை தொடங்கியது.
முதியோர் உதவித் தொகை ரூ.1000-க உயர்த்தப்பட்டதால் கலெக்டர் அலுவலகத்திலும், தாலுகா அலுவலகத்திலும் மனுக்கள் குவிந்தன. நெல்லை மாவட்டத்தில் முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித் தொகை கேட்டு இதுவரை 56 ஆயிரத்து 561 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களின் உண்மை நிலை குறித்து மூன்று நாட்கள் நேரடி கள விசாரணை நடத்த அந்தந்த தாசில்தார்களுக்கு கலெக்டர் நடராஜன் உத்தரவிட்டார்.
இதையடுத்து தாலுகாக்களிலும் மனுக்கள் மீதான நேரடி விசாரணை தொடங்கியது. விசாரணை அலுவலர்கள் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள், ஆண் மகன் உள்ளாரா உள்ளிட்ட பல்வேறு விபரங்களை சேகரிப்பத்துடன், அவர்களிடம் கையெழுத்து பெறப்படுகிறது. விசாரணை பணியில் வி.ஏ.ஓ.க்கள், வருவாய் ஆய்வாளர்கள், பில் கலெக்டர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று (2-ம் தேதி) விசாரணையை முழுவதுமாக முடிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இந்த பணியை கண்காணிக்க ஒவ்வொரு தாலுக்காவிலும் துணை கலெக்டர்களும நியமிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications