ஜல்லிக்கட்டை தடை செய்யக் கோரும் ஹோமமாலினி!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மிருகவதை சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும், என்று, ஹேமமாலினி எம்.பி. மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல இந்தி நடிகையான ஹேமமாலினி, பாரதீய ஜனதா கட்சியின் டெல்லி ராஜ்யசபை எம்.பி.யாக உள்ளார்.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்கு அவர் நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், "தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளையொட்டிய காலத்தில் ஜல்லிக்கட்டு என்ற மாடுபிடி விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் மாடுகள் முட்டி கடந்த 20 ஆண்டுகளில் 200 பேருக்கும் மேல் உயிர் இழந்து இருக்கிறார்கள். கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜல்லிக்கட்டின் போது இருவர் இறந்தனர். மேலும் 215 பேர் காயம் அடைந்தனர்.

மிருகவதை சட்டத்துக்கு எதிரானது...

இந்த விளையாட்டு, மிருகவதை சட்டத்துக்கு எதிரானது. மாடுகள் பாய்ந்து வரும் போது அதை பிடிக்கும் ஆர்வத்தில், வாலை பிடித்து இழுத்தல், கொம்பை பிடித்து அமுக்குதல் போன்றவை தவிர காளையை பல்வேறு முறைகளில் சித்ரவதைப்படுத்துகிறார்கள்.

இதனால் காளைகளுக்கு வலி மற்றும் காயங்கள் ஏற்படுகின்றன. மிருகங்களை பாதுகாக்க வேண்டும் என்பதோடு, மனித உயிர்களையும் காக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. எனவே இந்த விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும்.

சட்டப்படி குற்றம்

இந்த விளையாட்டில் பங்கு பெற காளைகளை, வாகனங்களில் அடைத்து, ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு கொண்டு செல்கிறார்கள். அப்போது காளைகளுக்கு உரிய வசதிகள் கிடைப்பது இல்லை. வாகன பயணத்தின்போது காளைகள் நெருக்கமாக அடைக்கப்படுவதால், அவற்றால் நிற்க கூட முடியாத நிலை ஏற்படுகிறது. இது மிருக வதை சட்டப்படி குற்றம்," என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+