கறுப்பு பண வழக்கு: ஹசன் அலிக்கு ஜாமீன் மறுப்பு
மும்பை: வெளிநாடுகளில் கறுப்புப் பணம் பதுக்கிய வழக்கில் பிரபல தொழிலதிபர் ஹஸன் அலிக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் மறுத்துவிட்டது.
வெளிநாட்டு வங்கிகளில் 93 மில்லியன் டாலர் (ரூ.419 கோடி) பதுக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், புனே குதிரைப்பண்ணை உரிமையாளர் ஹசன் அலிகானும், அவருடைய கூட்டாளி காசிநாத் தபுரியாவும் கடந்த மார்ச் மாதம் அமலாக்கப் பிரிவால் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் ஜாமீன் கோரி, மும்பை முதன்மை செசன்சு கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
அவர்களுக்கு ஜாமீன் வழங்க அமலாக்கப்பிரிவு வக்கீல் உஜ்வால் நிகாம் எதிர்ப்பு தெரிவித்தார். ஹசன் அலி, ஆயுத வியாபாரம் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்ததாகவும், சர்வதேச ஆயுத வியாபாரியுடன் சேர்ந்து இந்தியாவுக்கு எதிராக போர் தொடுக்க சதி செய்ததாகவும் அவர் வாதிட்டார்.
இதையடுத்து, ஹசன் அலி, தபுரியா ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி ஸ்வப்னா ஜோஷி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications