புதுவை அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரி: புதுவையில் அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து புதுவை முதல்வர் ரங்கசாமி கூறியதாவது,
புதுவை சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதையடுத்து நான் முதல்வராகவும் மற்றும் 4 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றுக் கொண்டோம். ஆனால் அவர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கப்படாமலேயே இருந்தது. தற்போது புதிய அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி எனக்கு பொது நி்ர்வாகம், உள்துறை, வருவாய்த்துறை உள்பட பல்வேறு துறைகளும், அமைச்சர் கல்யாணசுந்தரத்துக்கு போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளும், அமைச்சர் சந்திரகாசுக்கு விவசாயத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ராஜவேலுவுக்கு சமூக நலத்துறையும், அமைச்சர் பன்னீர் செல்வத்துக்கு உள்ளாட்சித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications