2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு-சிபிஐ கோர்ட்டில் நாளை மீண்டும் விசாரணை தொடக்கம்

டெல்லியில் உள்ள சிறப்பு சிபிஐ கோர்ட்டில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது. கோடை விடுமுறையையொட்டி கோர்ட் செயல்படவில்லை. இந்த நிலையில் கோடை விடுமுறைக்குப் பின்னர் நாளை முதல் மீண்டும் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணைக்கு வருகிறது.
நாளை கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வரும்போது முனனாள் அமைச்சர் ராசா, திமுக எம்.பி. கனிமொழி, ஸ்வான் டெலிகாம் நிறுவன பிரமோட்டர் ஷாஹித் உஸ்மான் பல்வா உள்ளிட்ட 14 பேர் நீதிபதி ஓ.பி.ஷைனி முன்பு ஆஜர்படுத்தப்படுவர்.
உச்சநீதி்மன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கை சிறப்பு சிபிஐ கோர்ட் விசாரித்து வருவது நினைவிருக்கலாம்.
நாளை முதல் அரசுத் தரப்பு மற்றும் குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பு வாதங்கள் தொடங்கவுள்ளன.
இந்த வழக்கில் இதுவரை 2 குற்றப்பத்திரிக்கைகளை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. இதில் 14 தனி நபர்கள் மற்றும் 3 தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உள்பட மொத்தம் 17 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஜூலை 2வது வாரத்தில் தனது மூன்றாவது குற்றப்பத்திரிக்கையை சிபிஐ தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
முதல் குற்றப்பத்திரிக்கை ஏப்ரல் 2ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில் ராசா, பல்வா, முன்னாள் தொலைத் தொடர்புத்துறை செயலாளர் சித்தார்த் பஹுரா, ராசாவின் உதவியாளர் சந்தோலியா, யூனிடெக் நிறுவன எம்.டி. சஞ்சய் சந்திரா, டிபி ரியாலிட்டி பிரமோட்டர் வினோத் கோயங்கா, ரிலையன்ஸ் அடாக் அதிகாரிகள் ஹரி நாயர், சுரேந்திர பிபாரா, கெளதம் தோஷி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றன.
2வது குற்றப்பத்திரிக்கையில் கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றன என்பது நினைவிருக்கலாம்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications