சிறுவனைக் கொலை செய்த கொலையாளியை கைது செய்ய வேண்டும்: சீமான்
சென்னை: சிறுவன் தில்ஷனை சுட்டுக் கொன்ற கொலையாளியைக் கைது செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சென்னை தீவுத்திடல் அருகில் உள்ள இந்திரா காந்தி நகரைச் சேர்ந்த குமார் என்பவரின் 13 வயது மகன் தில்ஷன் விடுமுறை நாளான நேற்று மதியம் 1.30 மணியளவில் கொடிமரச்சாலை ராணுவக் குடியிருப்பில் உள்ள மரங்களில் ஏறி பழங்களைப் பறித்து விளையாடிக் கொண்டிருந்த பொழுது ராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் அந்த சிறுவனை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். இது மிருகத்தனம் ஆகும். வன்மையாகக் கண்டிக்கத்தக்க அநீதி ஆகும்.
தீவுத்திடல் அருகில் உள்ள மக்கள் அங்கு காலம் காலமாக குடியிருந்து வருகின்றனர். இன்று எத்தனையோ மாட மாளிகைகளும், உல்லாச புரிகளும், ராணுவம் சார்ந்த குடியிருப்புகளும், கட்டிடங்களும் அப்பகுதியில் முளைத்திருக்கலாம்.
ஆனால் இம்மக்கள் அந்த மண்ணின் பூர்வீக குடிகள். அவர்களுக்கே அந்த மண்ணில் அனைத்துக்கும் முதல் உரிமை இருக்கிறது. அப்பகுதி மக்களுக்கே விளையாட்டுக் களம் முதற்கொண்டு அனைத்தையும் பயன்படுத்தவும் முதல் உரிமை இருக்கிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் சிறுவர்கள் விளையாடுவது வழக்கம். அதனால் அருகில் உள்ள ராணுவக் குடியிருப்பில் உள்ள மரங்களில் ஏறி விளையாடியுள்ளனர். இதில் துளியும் தவறு கிடையாது.
ஆனால் அவ்வாறு விளையாடிய சிறுவனை அநீதியாக படுகொலை செய்துள்ளனர். சிறுவர்கள் மரங்களில் ஏறி விளையாடுவதால் ஒன்றும் இந்த நாட்டின் “இறையாண்மை" கெட்டுப் போய் விடாது. அப்படியே சிறுவன் விளையாடியது தவறு என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொண்டாலும் அவனை அழைத்து அன்பாக அறிவுருத்தி வெளியே அனுப்புவது தான் நெறிமுறை. அதை விடுத்து தன் கையில் துப்பாக்கி இருக்கிறது என்ற காரணத்துக்காக்க் கொலை செய்வது என்பது மிருகத்தனம்.
நம் எதிரிகளிடம் இருந்து மக்களைக் காப்பது தான் ராணுவத்தின் பணி என்கிறார்கள்.ஆனால் ஒரு தவறும் செய்யாத சிறுவனைக் கொலை செய்யும் அளவிற்கு சென்றிருக்கிறார் அந்த ராணுவ"வீரர்". இது வீரம் கிடையாது. மிருகத்தனம்.
தங்கள் உயிரைக் கொடுத்தாவது நாட்டையும், நாட்டு மக்களையும் காப்போம் என்று கூறிப் பணியில் சேரும் ராணுவத்தைச் சேர்ந்தவர் அப்பாவி சிறுவனைக் கொலை செய்துள்ளார். இது அக்குடும்பத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அக்குடும்பத்துக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த துயர சம்பவத்திற்கு உரிய பரிகாரமே கிடையாது. சிறுவனைப் படுகொலை செய்த ராணுவத்தைச் சேர்ந்த அந்தக் கயவரை உடனே கைது செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறி்க்கையில் கூறப்பட்டுள்ளது.
-
Land Rover Defender கான்வாயில் வரும் ஸ்டாலின் பெயரில் ஒரு வாகனம் கூட இல்லை! சீமான் சொத்து எவ்வளவு? -
"150 கிராம் தங்கம், ரூ.39 லட்சம் சொத்து.. ரூ.5.11 லட்சம் கடன்.." சீமானின் சொத்து மதிப்பு இதுதான் -
Thirumavalavan: சிதம்பரம் இடைத்தேர்தல் செலவை திருமாவளவன் ஏற்பாரா? சீமான் கேள்வி -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications