ராணுவ வீரர்கள் யாரும் தில்ஷனை சுடவில்லை-தொடர்ந்து பிடிவாதமாக மறுக்கும் ராணுவம்
சென்னை: ராணுவத் தரப்பைச் சேர்ந்த ஒருவர்தான் சிறுவன் தில்ஷனை சுட்டுக் கொன்றது என்பது தெளிவாகத் தெரிந்தும் கூட, ராணுவ வீரர்கள் யாரும் சுடவில்லை என்று ராணுவத் தரப்பில் தொடர்ந்து பிடிவாதமாக மறுக்கப்பட்டு வருகிறது.
இதனால் சிபிசிஐடி போலீஸார் கடும் எரிச்சலடைந்துள்ளனர். தீவுத் திடல் ராணுவக் குடியிருப்பு வளாகத்திற்குள் மரத்திலிருந்து விழுந்த பாதாம் பழங்களைப் பறிக்க முயன்றபோது 13 வயதேயான சிறுவன் தில்ஷனை அநியாயமாக சுட்டுக் கொன்று விட்டனர்.
சுட்டுக் கொன்ற ராணுவக் குடியிருப்பைச் சேர்ந்த ஒருவர்தான் என்பதை நேரில் பார்த்த சிறுவர்கள் கூறியுள்ளனர். ஆனால் ராணுவம் இதை தொடர்ந்து மறுத்து வருகிறது. இதுகுறித்து ராணுவ பிரிகேடியர் சசி நாயர் கூறுகையில்,
ராணுவ அதிகாரிகள் குடியிருப்பில் காவல்வீரர்கள் கையில் துப்பாக்கி வைத்திருப்பது இல்லை. எனவே, துப்பாக்கியால் சுட்டது யார்? என்பது பற்றி விசாரித்துத்தான் முடிவுக்கு வர முடியும் என்று கூறியுள்ளார்.
அப்படியானால் ராணுவ அதிகாரிகள் யாரேனும் சுட்டார்களா என்ற கேள்விக்கு ராணுவத்திடமிருந்து பதில் ஏதும் இல்லை.
இந்த நிலையில், சென்னையில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் பத்திரிக்கை தகவல் அலுவலகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்,
ராணுவ அதிகாரிகள் குடியிருப்பு பகுதியில் தில்ஷன் என்ற 13 வயது சிறுவன் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. இந்த சம்பவம், ராணுவ அதிகாரிகளை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. சம்பவம் நடந்த இடத்தில், துப்பாக்கியுடன் எந்த ராணுவ வீரரும் பணியில் இல்லை.
குற்றவாளியை கண்டறியும் பணியில் உள்ளூர் போலீசாருடன் சேர்ந்து ராணுவத்தினரும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறுவனின் மரணத்திற்கு காரணமான நபரை சட்டத்தின் முன் கொண்டுவந்து நிறுத்துவோம் என்று மட்டும் கூறியுள்ளனர்.
சிபிசிஐடி போலீஸாரை சுதந்திரமாக செயல்பட விட்டால் உடனடியாக குற்றவாளியை அவர்கள் பிடித்து விடுவார்கள். ஆனால் அப்படிச் செய்யாமல், நாங்கள் சுடவில்லை, சுடவில்லை என்று மட்டும் ராணுவம் கூறி வருவதால் ஏற்கனவே கடும் கோபத்துடன் உள்ள பொதுமக்கள் மேலும் ஆத்திரமடைந்துள்ளனர்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications