இலங்கையின் கொலைக்களம் விவாதம்: மணிவண்ணன், சீமான் பங்கேற்பு!
'இலங்கையின் கொலைக்களம்' என்ற பெயரில் பிரிட்டனின் பிரபலமான சேனல் 4 ஒளிபரப்பிய தமிழினப் படுகொலை வீடியோ குறித்த விவாதம் தமிழன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
இந்த விவாதத்தில் நாம் தமிழர் தலைவர் சீமான், பேராசிரியர் பால் நியுமன், இயக்குநர் மணிவண்ணன், பேராசிரியர் தீரன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
தமிழீழத்தில் தமிழ் மக்கள் மீது இலங்கை இனவெறி அரசு நடத்திய போரின் போது பாரிய போர்க் குற்றங்களைப் புரிந்தது இலங்கை இராணுவம்.
அதனை அனைத்துலக மக்களுக்கு எடுத்து காட்டியது சனல் 4 ஒளிபரப்பிய 'இலங்கையின் கொலைக்களம்' என்ற ஆவணப்படம்.
தமிழன் தொலைக்காட்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான், பேராசிரியர் பால் நியுமன் (டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தில் பங்காற்றியவர்), இயக்குனர் மணிவண்ணன், பேராசிரியர் தீரன் ஆகியோர் இதை பற்றி விரிவான ஒரு விவாதத்தை முன்வைத்தனர்.
இலங்கையை சர்வதேச அரங்கில் தண்டனைக்குட்படுத்தவும், ராஜபக்சேவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவும் இதை விட வேறு எந்த ஆதாரமும் தேவையில்லை. இதை சர்வதேச நாடுகளும் உணர்ந்துள்ளன என்றார் இயக்குநர் மணிவண்ணன்.












Click it and Unblock the Notifications