முல்லைப் பெரியாறு வழக்கு-கேரள மனுவுக்கு 6 வாரத்திற்குள் பதிலளிக்க தமிழகத்திற்கு உத்தரவு
Subscribe to Oneindia Tamil

முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக கேரள அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தற்போது உள்ள நூறாண்டு கால அணையை மூடி விட்டு புதிய அணை கட்ட அது மும்முரமாக உள்ளது. இதுதொடர்பாக சட்டத் திருத்தத்தையும் கொண்டு வந்தது.
இந்த நிலையில் கேரள அரசு புதிய அணை கட்டுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல் செய்துள்ளது. இந்த மனுவுக்குப் பதிலளித்த கேரள அரசு புதிய அணை கட்ட வேண்டிய அவசியத்தை விளக்கியிருந்தது.
இந்தப் பின்னணியில் இன்று முல்லைப் பெரியாறு அணை வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கேரள அரசின் மனுவுக்கு 6 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு கூறி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் வரும் கால்வாயை சீரமைக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் அனுமதி அளித்தும் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications