Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பத்பநாபசுவாமி கோவிலில் கிடைத்துள்ள ரூ. 1 லட்சம் கோடியை வைத்து என்ன செய்யலாம்?

Subscribe to Oneindia Tamil

Padmanabha Swamy Temple
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்பநாபசுவாமி கோவிலில் உள்ள பாதாள அறைகளில் இருந்து கிடைத்துள்ள ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் உள்ளி்ட்டவற்றை வைத்து என்ன செய்வது என்று யோசனைகள் வர ஆரம்பித்துவிட்டன.

திருவனந்தபுரம் பத்பநாபசுவாமி கோவிலில் உள்ள 6 பாதாள அறைகளில் இருந்து இதுவரை ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான தங்க, வைர, வைடூரிய நகைகள், சிலைகள், காசுகள் என பல விலைமதிப்பற்றவை எடுக்கப்பட்டுள்ளன. இத்தனை நாட்கள் திருப்பதி ஏழுமலையான் கோவில் தான் பணக்கார கோவில் என்று அனைவரும் நினைத்திருந்தனர்.

ஆனால் திருப்பதி கோவிலை பின்னுக்குத் தள்ளிவிட்டு பத்பநாபசுவாமி கோவில் பணக்கார கோவிலாகிவிட்டது. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகிலேயே பணக்கார சாமியாகவும் பத்மநாபசுவாமி உருவெடுத்துள்ளார்.

பத்பநாபசுவாமி கோவில் நகைகள் மதிப்பு விப்ரோ நிறுவனத்தி்ன் சந்தை முதலீடான ரூ. 1.04 லட்சம் கோடிக்கு இணையானது. இது ரிலையன்ஸ் நிறுவனத்தின் மதிப்பில் மூன்றில் பங்கு உள்ளது.

பாஸ்கோ நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்யப்போவதாக கூறியுள்ள 2 பில்லியன் டாலரை விட இரண்டு மடங்கு அதிகமாகும் என்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த நாளிதழ் மேலும் கூறியுள்ளதாவது,

தற்போது கிடைத்துள்ள தங்கத்தை வைத்து என்ன செய்யலாம் என்பதையும் அது ஒரு கணக்கு போட்டுள்ளது:

1. உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு ஆகும் ரூ. 70 ஆயிரம் கோடி செலவிடலாம். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத்திற்கு ரூ. 40 ஆயிரம் கோடி கொடுக்கலாம்.

2. 2. 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசின் கல்வி பட்ஜெட்டை கவனிக்கலாம்.

3. 7 மாதத்திற்கான பாதுகாப்பு செலவைச் சமாளிக்கலாம், அரசின் வட்டிக் கடனை 4 மாதத்திற்கு செலுத்தலாம்.

இதேபோல இது குறித்து மெயில் டுடே கூறியதாவது,

ரூ. 1 லட்சம் கோடியை வைத்து:

1. 290 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் கட்டலாம்.

2. 14 ஆயிரம் கிமீ தேசிய நெடுஞ்சாலை அமைக்கலாம்.

3. யூரோ பைட்டர் போன்று 255 போர் விமானங்கள் வாங்கலாம்.

4. ஜவஹர்லால் நேரு மைதானம் போல் ஆயிரம் விளையாட்டு மைதானங்கள் கட்டலாம்.

இந்த தங்கக் குவியல் கோவிலுக்கா, கோவில் நிர்வாகத்திற்கா, மாநில அரசுக்கா அல்லது மத்திய அரசுக்கா என்று உச்ச நீதிமன்றம் தான் தெரிவிக்க வேண்டும். இவ்வளவு தங்கத்தை வைத்து என்ன செய்யலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+