தயாநிதி மாறனின் ராஜினாமா காலம் கடந்தது: ஜெயலலிதா

தனியார் தொலைக்காட்சிகளுக்கு அவர் அளித்த பேட்டியில், தயாநிதி மாறன் பதவி விலக வேண்டும் என்று அ.தி.மு.க. நீண்ட காலமாக கூறி வந்தது. இது குறித்து பிரதமரை நீண்ட நாட்களாக வற்புறுத்தி வந்தோம்.
ஆனால், இப்போது தான் அவர் ராஜினாமா செய்துள்ளார். இது எப்போதோ நடந்தி்ருக்க வேண்டியது. மிகவும் காலம் கடந்து இப்போது நடந்துள்ளது. பிரதமர் ஏன் இத்தனை காலம் அமைதி காத்தார் என்பது தான் கேள்வி.
தயாநிதி மாறன், சன் டிவி கலாநிதி மாறன் மீதான அனைத்து புகார்களும் முழுமையாக விசாரிக்கப்படும்.
திமுகவுக்கு மக்கள் கடந்த தேர்தலிலேயே முடிவைத் தேடித் தந்துவிட்டார்கள் என்றார் ஜெயலலிதா.
ஏன் இவ்வளவு தாமதம்?-பா.ஜ.க:
பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறுகையில், இந்த விலகல் எதிர்பார்க்கப்பட்டது தான். இது எப்போதோ நடந்திருக்க வேண்டும். பிரதமர் ஏன் இந்த நேரத்தில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார்?. தயாநிதியின் ராஜினாமா காலம் கடந்த ராஜினாமா என்றார்.












Click it and Unblock the Notifications