நாளை திருச்சியில் திமுக பொதுக் கூட்டம்: மு.க. ஸ்டாலின் பேசுகிறார்
திருச்சி: நாளை திருச்சியில் திமுக சார்பில் நடைபெறும் தீர்மான விளக்க பொதுக் கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.
திருச்சி புத்தூர் நான்கு வழிச்சாலையில் நாளை (8-ம் தேதி) மாலை 6 மணிக்கு திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு தீர்மான விளக்க பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்திற்கு திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமை வகிக்கின்றார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அன்பில் பெரியசாமி வரவேற்புரை அளிக்கின்றார்.
முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே. என். நேரு, முன்னாள் அமைச்சர் செல்வராஜ், திருச்சி சிவா எம்.பி., செல்வேந்திரன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
இதில் முன்னாள் துணை முதல்வரும் திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகின்றார்.
கலைஞர் அறிவாலயத்திற்கு பாதை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக காவல்துறையில் புகார் கொடுத்துள்ள நிலையில் இந்த கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் பெறுகின்றது.












Click it and Unblock the Notifications