ஆகஸ்ட் 15 முதல் அரசு கேபிள் டிவி செயல்படத் தொடங்கும்- கே.ராதாகிருஷ்ணன்
திருப்பூர்: வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் அரசு கேபிள் டிவி முழுமையாக செயல்படும் என்று அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அரசு கேபிள் டிவி நிறுவனத்தை விரைவில் செயல்படுத்தவும், தேவையான இடங்களில் கட்டுப்பாட்டு அறைகள் நிறுவவும் பல்வேறு மாவட்டங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். திருப்பூர் மாவட்டத்தில் கட்டுப்பாட்டு அறை அமைப்பதற்கான ஆய்வுகள் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டன.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள ஓர் அறையிலேயே அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கட்டுப்பாட்டு அறையை செயல்படுத்திட முடிவு செய்யப் பட்டது.
ஆய்வைத் தொடர்ந்து ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கேபிள் டிவி தொழிலில் நிலவி வரும் தனி நபர்களின் ஆதிக்கத்தை ஒழித்திட அரசு கேபிள் டிவி கழகம் துவங்கப்பட்டது. இதன்மூலம் குறைந்த விலையில் மக்களுக்கு கேபிள் இணைப்பு வழங்குவதே அரசின் நோக்கம்.
அதனடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு கேபிள் டிவியை முழுமையான செயல்பாட்டுக்குக் கொண்டு வர ஆய்வு நடத்தப்படுகிறது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் அரசு கேபிள் டிவி கட்டுப்பாட்டு அறையை செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் எத்தனை கட்டுப்பாட்டு அறைகள் அமைப்பது என்பது ஆய்வின் மூலம் முடிவு செய்யப்படும். கட்டுப்பாட்டு அறைகள் அமைத்தவுடன் மாவட்டந்தோறும் கேபிள் டிவி ஆபரேட்டர்களை வரவழைத்து அரசு கேபிள் டிவி வினியோகிக்கப்படும்.
அரசு கேபிள் டிவி நிறுவனத்தைச் செயல்படுத்தும் ஆபரேட்டர்களுக்கு முழுமையாக பாதுகாப்பு அளிக்கப்படும். மக்களும் குறைந்த விலையில் கேபிள் டிவி பார்க்க வழிவகை ஏற்படுத்தப்படும்," என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications