ராசா, அசோக் சவான் ஊழல்வாதிகள்: ராகுல் காந்தி சாடல்

Subscribe to Oneindia Tamil

Rahul Gandhi
கங்கோலி: முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா மற்றும் முன்னாள் மஹாராஸ்டிர முதல்வர் அசோக் சவான் ஆகியோர் ஊழல்வாதிகள் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேச விவசாயிகளுக்கு ஆதரவாக அம்மாநிலத்தில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார் ராகுல் காந்தி. கிராமம், கிராமமாகச் சென்று விவசாயிகளின் குறைகளைக் கேட்டு வரும் அவர் மக்களிடையே பேசுகையில்,

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டு இருக்கிறது. ஊழல் செய்வது யாராக இருந்தாலும் அது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதனால் தான் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா மற்றும் ஆதர்ஷ் ஊழல் தொடர்பாக முன்னாள் மஹாராஸ்டிர முதல்வர் அசோக் சவான் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் தான் ஒருவர் (ராசா) சிறையில் உள்ளனர்.

இதுவரை மத்திய அமைச்சர்களின் ஊழல்கள் குறித்து மௌனம் காத்து வந்த ராகுல் காந்தி இன்று தான் முதல்முறையாக அது குறித்துப் பேசியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+