இலவச லேப்டாப்: டெண்டர் திறப்பு 18ம் தேதிக்கு தள்ளிவைப்பு
சென்னை: இலவச லேப்டாப் தொடர்பான டெண்டர் தேதி 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்குவதற்கு 9 லட்சத்து 12 ஆயிரம் லேப்டாப் தயாரித்து தர உலகளாவிய டெண்டர் கோரப்பட்டிருந்தது.
தலா ரூ. 15,000 செலவு பிடிக்கும் லேப்டாப்களை 9.12 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு வழங்க ரூ. 1,368 கோடி செலவாகும்.
இதை தயாரித்து வழங்க பல்வேறு நிறுவனங்கள் முன் வந்துள்ளன. இவர்கள் சமர்பித்த டெண்டர்கள் இன்று மாலை 3 மணிக்கு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் மேலும் பல நிறுவனங்கள் பலவிதமான மாடல் லேப்டாப்களை தயாரித்து வழங்க முன்வந்துள்ளன.
இதையடுத்து டெண்டரில் மேலும் நிறுவனங்கள் பங்கேங்கும் வகையில் டெண்டர் தேதி நீட்டிக்கப்பட்டு 18ம் தேதி மாலை 5 மணிக்கு டெண்டர் திறக்கப்படும் என்று எல்காட் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இந்தத் திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை மத்திய திட்டக் கமிஷன் நிராகரித்துவிட்டதும் நினைவுகூறத்தக்கது.
அடுத்த 5 ஆண்டுகளி்ல் 68 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க ரூ. 10,200 கோடியை வழங்குமாறு ஜெயலலிதா கோரியிருந்தார்.












Click it and Unblock the Notifications