கள் குடித்ததால் பறிபோன கண் பார்வை: 31 கள்ளுக்கடைகளை மூட உத்தரவு
Subscribe to Oneindia Tamil
கொல்லம்: கேரளாவில் கள் குடித்த ஒருவருக்கு கண் பார்வை பறிபோனது. இதையடுத்து 31 கள்ளுக்கடைகளை மூட கலால் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் வள்ளிகுண்ணு அடுத்த கடுவினால் மேனி நினைவு காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவர் அப்பகுதியில் உள்ள கள்ளுக் கடை ஒன்றில் நேற்று முன் தினம் மாலை கள்ளு குடித்தார்.
கடையை விட்டு வெளியே வந்ததும் தன்னால் பார்க்க முடியவில்லை என கூறி அலறியபடி கீழே விழுந்தார். அவரை வன்டானம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து அறிந்த போலீசார் கள்ளுக்கடை உரி்மையாளர் ராஜுவை கைது செய்தனர். தொடர்ந்து நூறு நாடு சரகத்தில் செயல்படும் 31 கள்ளுக்கடைகளையும் மூட கலால் துறையினர் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications