இந்தியாவுக்கு உருப்படியான ரயில்வே அமைச்சரை பிரதமர் நியமிப்பாரா?

அந்த அளவுக்கு மிகவும் குளறுபடியான அமைச்சராக செயல்பட்டவர் மமதா. அதிலும், அமைச்சர் பதவியை டெல்லியிலிருந்து அவர் செயல்படுத்தாமல் கொல்கத்தாவிலிருந்து செயல்பட்டு வந்தார். கிட்டத்தட்ட பார்ட் டைம் ரயில்வே அமைச்சராகத்தான் அவரை பலரும் கருத முடிந்தது.
அதன் விளைவை ரயில்வே துறை அனுபவித்ததோ இல்லையோ அப்பாவி மக்கள் நிறையவே அனுபவித்து விட்டனர்.
மமதா ரயில்வே அமைச்சராக இருந்தபோதும் சரி, அவர் போன பிறகும் சரி இன்னும் ரயில்வே துறை விபத்துகளிலிருந்து மீளவில்லை.
மமதா ஆட்சிக்காலத்தின்போது எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகள்தான் அதிகரித்து வரும் ரயில் விபத்துகளுக்குக் காரணம் என்று கூறுகிறார்கள்.
ரயில்வே லைன்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல், அதிக அளவில் சரக்கு ரயில்களின் எண்ணிக்கையை அதிகரித்தது, தப்பும் தவறுமான திட்டங்களுக்கு ஓ.கே. சொன்னது, பயணிகள் ரயில்களின் எண்ணிக்கையை திட்டமிடாமல் அதிகரித்தது ஆகியவை மமதாவின் தவறுகளாக கூறப்படுகின்றன. இதன் காரணமாகத்தான் ரயில்கள் விபத்துக்குள்ளாவது அதிகரித்துள்ளதாக ரயில்வே துறையினர் புலம்புகின்றனர்.
நேற்று நடந்த கல்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து சம்பவத்திலும் கூட விபத்து நடந்த இடத்திற்கு ரயில்வே இணை அமைச்சர்களில் 3 பேரில் ஒருவர் கூட உடனே போகவில்லை. திரினமூல் காங்கிரஸைச் சேர்ந்த ரயில்வே இணை அமைச்சர் முகுல் ராய் கூட அங்கு போகவில்லை.
ரயில்வேயில் உள்ள 16 மண்டலங்களில் ஒன்றில் கூட பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாக, திருப்திகரமாக இல்லை என்று தலைமை கணக்கு அதிகாரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில், இப்போது காலியாக உள்ள ரயி்லவே துறைக்கும் கூட திரினமூல் காங்கிரஸைச் சேர்ந்த ஒருவரைத்தான் ரயில்வே அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று மமதா நிபந்தனை விதித்துள்ளார். ஆனால் மமதாவே இப்படி இருந்தார் என்றால், அவரது எம்.பிக்கள் எப்படி இருப்பார்கள் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனவே பிரதமரும், சோனியா காந்தியும் பெரும் குழப்பத்தில் மூழ்கியுள்ளனர்.
ஆனால் பயணிகள் உயிர் விஷயத்தில் பிரதமரும், சோனியா காந்தியும் இனியும் விளையாடக் கூடாது. மிகத் திறமை வாய்ந்த, அனுபவசாலியான ஒருவரையே ரயில்வே அமைச்சராக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications