இந்தியாவுக்கு உருப்படியான ரயில்வே அமைச்சரை பிரதமர் நியமிப்பாரா?

அந்த அளவுக்கு மிகவும் குளறுபடியான அமைச்சராக செயல்பட்டவர் மமதா. அதிலும், அமைச்சர் பதவியை டெல்லியிலிருந்து அவர் செயல்படுத்தாமல் கொல்கத்தாவிலிருந்து செயல்பட்டு வந்தார். கிட்டத்தட்ட பார்ட் டைம் ரயில்வே அமைச்சராகத்தான் அவரை பலரும் கருத முடிந்தது.
அதன் விளைவை ரயில்வே துறை அனுபவித்ததோ இல்லையோ அப்பாவி மக்கள் நிறையவே அனுபவித்து விட்டனர்.
மமதா ரயில்வே அமைச்சராக இருந்தபோதும் சரி, அவர் போன பிறகும் சரி இன்னும் ரயில்வே துறை விபத்துகளிலிருந்து மீளவில்லை.
மமதா ஆட்சிக்காலத்தின்போது எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகள்தான் அதிகரித்து வரும் ரயில் விபத்துகளுக்குக் காரணம் என்று கூறுகிறார்கள்.
ரயில்வே லைன்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல், அதிக அளவில் சரக்கு ரயில்களின் எண்ணிக்கையை அதிகரித்தது, தப்பும் தவறுமான திட்டங்களுக்கு ஓ.கே. சொன்னது, பயணிகள் ரயில்களின் எண்ணிக்கையை திட்டமிடாமல் அதிகரித்தது ஆகியவை மமதாவின் தவறுகளாக கூறப்படுகின்றன. இதன் காரணமாகத்தான் ரயில்கள் விபத்துக்குள்ளாவது அதிகரித்துள்ளதாக ரயில்வே துறையினர் புலம்புகின்றனர்.
நேற்று நடந்த கல்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து சம்பவத்திலும் கூட விபத்து நடந்த இடத்திற்கு ரயில்வே இணை அமைச்சர்களில் 3 பேரில் ஒருவர் கூட உடனே போகவில்லை. திரினமூல் காங்கிரஸைச் சேர்ந்த ரயில்வே இணை அமைச்சர் முகுல் ராய் கூட அங்கு போகவில்லை.
ரயில்வேயில் உள்ள 16 மண்டலங்களில் ஒன்றில் கூட பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாக, திருப்திகரமாக இல்லை என்று தலைமை கணக்கு அதிகாரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில், இப்போது காலியாக உள்ள ரயி்லவே துறைக்கும் கூட திரினமூல் காங்கிரஸைச் சேர்ந்த ஒருவரைத்தான் ரயில்வே அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று மமதா நிபந்தனை விதித்துள்ளார். ஆனால் மமதாவே இப்படி இருந்தார் என்றால், அவரது எம்.பிக்கள் எப்படி இருப்பார்கள் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனவே பிரதமரும், சோனியா காந்தியும் பெரும் குழப்பத்தில் மூழ்கியுள்ளனர்.
ஆனால் பயணிகள் உயிர் விஷயத்தில் பிரதமரும், சோனியா காந்தியும் இனியும் விளையாடக் கூடாது. மிகத் திறமை வாய்ந்த, அனுபவசாலியான ஒருவரையே ரயில்வே அமைச்சராக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications