4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் மாற்றம்: டாஸ்மாக் எம்.டி. ஆனார் அபூர்வா
சென்னை: தமிழகத்தில் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாற்றி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது,
ஆவின் நிறுவன மேலாண் இயக்குநர் விபு நாயர் தொழில் துறை ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று கால்நடை பராமரிப்புத் துறை ஆணையாளர் எம். ஆர். மோகன் ஆவின் நிறுவன மேலாண் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
தொழில் துறை ஆணையாளர் அபூர்வ வர்மா டாஸ்மாக் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் டாஸ்மாக் மேலாண் இயக்குனர் டி. விவேகானந்தன் மாநில மனித உரிமைகள் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நகர் மற்றும் ஊரமைப்புத் துறை திட்ட முன்னாள் இயக்குநர் பங்கஞ் குமார் பன்சால் தமிழ்நாடு சுகாதார அமைப்பின் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் வளர்ச்சி, அற நிலையங்கள் மற்றும் செய்தித் துறை இணைச் செயலாளர் டி.பி.ராஜேஷ் பொதுத் துறை (மரபு) துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications