வடகிழக்கு பாகிஸ்தானில் அல் ஜவாஹிரி: அமெரிக்கா
நியூயார்க்: அல் கொய்தா தீவிரவாத அமைப்பை அழிப்பதே தங்கள் லட்சியம் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லியோன் பனேட்டா தெரிவித்துள்ளார்.
அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் வைத்து தான் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து அமெரிக்கா தீவிரவாதிகளைப் பிடிக்க பாகி்ஸ்தான் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டியது. பின்னர் பாகிஸ்தானுக்கு ரூ. 4 ஆயிரம் கோடி நிதியை அமெரிக்கா நிறுத்தியது.
இதையடுத்து அல் கொய்தா தலைவர் அல் ஜவாஹிரியை பிடிக்க அமெரிக்காவுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்கா தங்களுடன் உளவுத்துறை தகவல்களை பகிரந்து கொண்டால் தீவிரவாதிகளைப் பிடிக்க வசதியாக இருக்கும் என்றும் அது தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளராக பொறுப்பேற்றுள்ள லியோன் பனேட்டா கடந்த 9-ம் தேதி ஆப்கானிஸ்தான் சென்றார். அல் கொய்தாவின் தலைவர் அல் ஜவாஹிரி வடகிழக்கு பாகிஸ்தானில் உள்ள மலைப் பகுதியில் தான் பதுங்கியிருப்பதாக அவர் காபூலில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
பின் லேடன் கொல்லப்பட்ட பிறகு அல் கொய்தா தலைவர்களின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அல் கொய்தாவை அழிப்பதே எங்கள் லட்சியம் என்று மேலும் தெரிவித்தார்.
ஏற்கனவே பாகிஸ்தான் அல் கொய்தா உள்ளிட்ட தீவிரவாத அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அவர்கள் நாட்டுக்கும், மக்களுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறியுள்ளது. தீவிரவாத அமைப்புகளின் தலைவர்கள் பலர் வேட்டையாடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications