பங்குச் சந்தையில் பெரும் சரிவு... 310 புள்ளிகள் வீழ்ச்சி!
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்திய பங்குச் சந்தைகள் இன்று பெரும் வீழ்ச்சி கண்டன. சென்செக்ஸில் இன்று 309.77 புள்ளிகள் சரிந்தது.
கடந்த வாரம் கணிசமான ஏற்றம் பெற்ற மும்பை பங்குச் சந்தை, வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமையே சரிவைச் சந்தித்தது. 137 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 18,721 புள்ளிகளானது.
இன்று மேலும் 310 புள்ளிகள் சரிந்தது. இதன் மூலம் கடந்த மூன்று வாரங்களில் இல்லாத அளவு கணிசமான வீழ்ச்சியைக் கண்டுள்ளது சென்செக்ஸ்.
வர்த்தக நேர முடிவில் 18,411.62 புள்ளிகளில் நிலைப் பெற்றது சென்செக்ஸ். ஐடி துறை பங்குகள்தான் பெரும் வீழ்ச்சி கண்டன. இன்போஸிஸ், டாடா, விப்ரோ பங்குகள் சரிந்தன.
தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 89.95 புள்ளிகள் சரிந்து, அதன் குறியீட்டெண் 5,526.15 ஆக நிலைபெற்றது.












Click it and Unblock the Notifications