பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை
Subscribe to Oneindia Tamil
மணிலா: மத்திய பிலிப்பைன்ஸ் கடற்கரை அருகில் இன்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானது. இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
இன்று அதிகாலை 4. 47 மணி அளவில் நெக்ரோஸ் தீவின் தென்மேற்கில் இருந்து 83 கிமீ தொலைவில் பயங்கர நிலநடு்ககம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் ஆட்டம் கண்டன. வீட்டில் இருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டி தெருக்களுக்கு ஓடி வந்தனர்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் 2 முறை நிலம் அதிர்ந்தது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர்.
இந்த அதிர்வுகள் 5.7 மற்றும் 5.5-க பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.












Click it and Unblock the Notifications