2008 பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் மீண்டும் தாக்கிய தீவிரவாதிகள்
மும்பை: 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பைக்குள் புகுந்து பெரும் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் மும்பையை மீண்டும் தீவிரவாதிகள் தாக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் இன்று மாலை அனைவரும் வேலை முடிந்து வீடு திரும்பும் வேளையில் தீவிரவாதிகள் நடத்திய மூன்று வெடிகுண்டுத் தாக்குதல்கள் மும்பை மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளன.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி இரவில் மும்பைக்குள் புகுந்த பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் பத்து பேர் 3 நாட்களாக நடத்திய பயங்கர தாக்குதல் சம்பவத்தில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
தாக்குதலில் ஈடுபட்ட பத்து பேரில் அஜ்மல் கசாப் தவிர மற்ற 9 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர்.
இந்த சம்பவத்திற்குப் பின்னர் இன்று மீண்டும் மும்பையில் தீவிரவாதிகள் துணிகர தாக்குதல் நடத்தியுள்ளதால் மும்பை மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இத்தனைக்கும் 2008 சம்பவத்திற்குப் பின்னர் வரலாறு காணாத அளவிலான கண்காணிப்பும், பாதுகாப்பும் இருந்து வருகிறது. இதையும் மீறி நடந்துள்ள இந்த தாக்குதல் சம்பவத்தால் மக்கள் பெரும் அதிர்ச்சியுற்றுள்ளனர்.
இன்றைய தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து மும்பை முழுவதும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான பொருட்களை தொட வேண்டாம் என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
விமான நிலையம், ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications