193 பில்லியன் டாலர் உபரி வருமானத்துடன் சீனா!

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: இந்த நிதியாண்டின் முதல் பாதியில் சீனா 1.25 ட்ரில்லியன் அதாவது 193.3 பில்லியன் அளவு உபரியைப் பெற்றுள்ளது.

இந்தத் தகவலை அந்நாட்டு நிதித்துறை அறிவித்துள்ளது.

பொதுவாக பற்றாக்குறை என்ற பல்லவியையே கேட்டுப் பழகிய இந்தியாவுக்கு சீனா அடைந்துள்ள இந்த அபரிமிதமான உபரி அளவு ஆச்சர்யமான ஒன்றுதான்.

ஆனால் சீரான, உறுதியான வளர்ச்சித் திட்டங்களே அந்த நாட்டை இந்த அளவு உபரி வரும் அளவுக்கு மாற்றியுள்ளது.

சீனாவின் மொத்த உற்பத்தியில் 6.1 சதவீதமாக இந்த நிதி உபரி உள்ளது. இந்த ஆண்டுக்கான நிதிப்பற்றாக்குறை மொத்த உற்பத்தியில் 2 சதவீதமாக இருக்கும் என மதிப்பிட்டது சீனா. ஆனால் முதல் பாதி ஆண்டிலேயே உபரி நிதி 6.1 சதவீதமாக உள்ளது.

சீனப் பொருளாதாரத்தில் பொதுவாகவே, ஆரம்பத்தில் வருவாயைப் பெருக்கி செலவை இறுக்கிப் பிடிப்பார்கள். ஆண்டு இறுதி நெருங்க நெருங்க தாராளமாக செலவழித்து, பற்றாக்குறையைக் காட்டுவார்கள். இதன் மூலம் விலையை நிலைப்படுத்துவதோடு, சீரான அதேநேரம் உறுதியான பொருளாதார வளர்ச்சிக்கு அந்நாடு திட்டமிடுகிறது.

இந்த ஆண்டைப் பொறுத்தவரை, சீனா நல்ல வளர்ச்சியைப் பெற்றுள்ளது முதல் பாதியிலேயே. வருவாய் மற்றும் உற்பத்தியில் சீனா எதிர்ப்பார்த்ததற்கும் அதிகமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+