இந்தியன் முஜாஹிதீன் தாக்குதல் குறித்து பிப்ரவரியிலேயே எச்சரித்திருந்த உளவுத்துறை!
ஆனால் எந்த இடத்தில், எந்த நேரத்தில், எந்த தேதியில் தாக்குதல்கள் நடக்கும் என்பது தெரியவில்லை என்று இந்தியன் முஜாஹிதீன் இயக்கத்துடன் தொடர்புடைய ஒருவர் தெரிவித்திருந்தார்.
இந்த தாக்குதல் குறித்து அனைத்து மாநிலங்களும் எச்சரிக்கப்பட்டன. ஏற்கனவே நடந்த தாக்குதல்களில் தொடர்பில்லாத 2 குழுக்களுக்கு பயிற்சி அளித்து தயார் நிலையில் வைத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த தாக்குதல்களுக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய யாரையும் பயன்படுத்த வேண்டாம் என்று இந்தியன் முஜாஹிதீன் அமைப்பாளர் ஒருவர் எச்சரித்திருந்தார்.
மஹாராஷ்டிரா போலீசின் பயங்கரவாத எதிர்ப்பு படையின்ர் நேற்று முன்தினம் தான் 2 இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகளை கைது செய்தனர். மறுநாளே மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ஜாவேரி பஜார், ஓபரா ஹவுஸ் மற்றும் கபூதர்கானா ஆகிய இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்துள்ளன.
கடந்த 2008-ம் ஆண்டு நடந்த அகமதாபாத் குண்டுவெடிப்புகளில் பயன்படுத்தப்பட்ட கார்களை கைதாகியுள்ள இந்த இருவரும் திருடியுள்ளதால், தற்போது நடந்துள்ள குண்டு வெடிப்புகளில் ஈடுபட்ட தீவிரவாதிகள் குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று நடந்துள்ள குண்டு வெடிப்புகளை இந்தியன் முஜாஹிதீன் மற்றும் லஷ்கர் இ தொய்பா தான் நடத்தியிருக்க வேண்டும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஏனெனில் சம்பவங்கள் நடந்த இடங்களில் அம்மோனியம் நைட்ரேட் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதைத் தான் இந்தியன் முஜாஹிதீன் மும்பை ரயில் தாக்குதல்கள், அகமதாபாத், ஜெய்பூர் மற்றும் டெல்லி குண்டுவெடிப்புகளில் பயன்படுத்தியுள்ளது.
இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை
இதற்கிடையே, மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பத்திற்கு எந்த தீவிரவாத இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.













Click it and Unblock the Notifications