திருப்பூர் சாய ஆலைகளைத் திறக்க குழு- மத்திய அமைச்சர்
டெல்லி: திருப்பூரில் மூடப்பட்டுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை மற்றும் சாய நிறுவனங்களைத் திறக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா புதன்கிழமை தெரிவித்தார்.
மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சரான ஆனந்த் சர்மாவுக்குக் கூடுதல் பொறுப்பாக ஜவுளித் துறையும் வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, அத் துறையின் பணிகளை புதன்கிழமை சுமார் மூன்று மணி நேரம் அவர் ஆய்வு செய்தார்.
திருப்பூரில் நொய்யல் ஆற்றை மாசுபடுத்தும் வகையில் செயல்பட்ட சாயப்பட்டறைகளை மூடும்படி இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மூடப்பட்ட நிறுவனங்களை உடனடியாகத் திறக்க வேண்டிய அவசியம் குறித்து ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
"குறிப்பிட்ட காலகெடுவுக்குள் அந்த நிறுவனங்களைத் திறக்க சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதற்காக ஒரு குழு அமைக்கப்படவுள்ளது' என்றார்.












Click it and Unblock the Notifications