இந்தியா இன்னும் கிராமங்களில்தான் வாழ்கிறது!

நாடுமுழுவதும் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இது தொடர்பான அறிக்கையை மத்திய உள்துறை செயலர் ஆர்.கே.சிங் வெள்ளிக்கிழமை தில்லியில் வெளியிட்டார். இதன் விவரங்களை இந்தியாவின் பதிவாளர் ஜெனரலும்,மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையருமான சி. சந்திரமௌலி செய்தியாளர்களிடம் கூறியது:
இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் 83.3 கோடி மக்கள் கிராமங்களில்தான் வசிக்கின்றனர். 37.7 கோடி மக்கள் மட்டுமே நகரங்களில் வசித்து வருகின்றனர். நாடு விடுதலை அடைந்த பிறகு முதல் முறையாக, கிராமங்களைவிட, நகரங்களில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது.
2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, நகரமயமாக்கம் 27.81 சதவிகிதமாக இருந்தது. இது 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது, 31.16 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் கிராமப்புறங்களில் குழந்தைப் பிறப்பு 9 கோடியாக உயர்ந்துள்ளது.
கிராமப்புறங்களில் அதிகளவு மக்கள் வசிப்பது உத்தரப் பிரதேசத்தில்சான்.
மும்பையில் 5 கோடி பேர்...
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில்தான் 5 கோடி மக்கள் வசிக்கின்றனர்.
நகர்புறங்களை விட, எழுத்தறிவுப் பெற்றோர் எண்ணிக்கை கிராமங்களில் 3 அல்லது 4 மடங்கு அதிகமாக உள்ளது. அதுபோன்று, பெண்களில் எழுதப் படிக்க தெரிந்தவர்களின் எண்ணிக்கையும் ஆண்களை விட நகரம் மற்றும் கிராமங்களில் அதிகரித்துள்ளது.
கிராமங்களில் ஆண்கள், பெண்கள் எழுத்தறிவுப் பெற்றவர்களின் இடைவெளி 2001 ஆம் ஆண்டு 24.6 சதவிகிதமாக இருந்தது. இது 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 19.8 சதவிகிதமாக குறைந்துள்ளது. இதே காலத்தில், நகரங்களில் இது 13.4 சதவிகித்திலிருந்து 9.8 சதவிகிதமாக குறைந்துள்ளது, என்றார் அவர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications