சோனியா காந்தி சோனியா ஆசியிருந்தா ஹீரோ, இல்லைனா ஜீரோ: நாராயணசாமி
புதுச்சேரி: காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் ஆசி இருந்தால் தான் ஒருவர் ஹீரோவாக முடியும். இல்லையென்றால் வெறும் ஜீரோ தான் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுவையில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைமையகத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இதில் கலந்து கொண்டு மத்திய அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:
"காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடும். புதுவையில் மக்கள் ஆட்சி மாற்றம் வேண்டி வாக்களித்துள்ளதை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.
மும்பையில் வெடிகுண்டுகள் வெடித்தன. பிரதமரும், சோனியா காந்தியும் தான் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, அதில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சந்தி்த்து ஆறுதல் கூறினர். வேறு எந்த கட்சித் தலைவர்களும் செல்லவில்லை.
புதுவையில் தற்போது காங்கிரஸ் ஆட்சியில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்பதில் சந்தேகமில்லை. ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி மக்களின் நலனுக்காக பாடுபடுவோம்.
காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தியின் ஆசி இருந்தால் தான் ஒருவர் ஹீரோவாக முடியும். இல்லையென்றால் வெறும் ஜீரோ தான். புதுவையில் காங்கிரஸ் கட்சி பலமாக உள்ளது. நேற்று அடித்த காற்றில் மேலே செல்லலாம். ஆனால் அடுத்த காற்றில் கீழே வந்துவிடுவார்கள்.
தமிழகத்தி்ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி பல நலத்திட்டங்களை செயல்படுத்தினார். இருப்பினும் அவரால் மீண்டும் முதல்வராக முடியவில்லை. காங்கிரஸ்-திமுக கூட்டணி இன்னும் பலமாக தான் உள்ளது.
புதுவையில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன. ஆனால் தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் 2 1/2 மாதங்களி்ல் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டவில்லை. மாறாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளனர். இவர்களை நம்பி வாக்களித்தவர்கள் எல்லாம் தற்போது கண்ணீர் வடிக்கின்றனர்.
புதுவை முதல்வர் அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற ரூ. 50 ஆயிரம் கோடி தேவைப்படும். இருப்பினும் அவர் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்," என்றார்.












Click it and Unblock the Notifications