மும்பை தொடர் குண்டுவெடிப்பு-போலீஸ் விசாரணைக்குச் சென்றவர் மர்ம மரணம்

மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக பயஸ் உஸ்மானி என்பவரை போலீஸார் பிடித்து விசாரித்தனர்.
இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் நிஸார் தம்போலி கூறுகையில், பயஸ் உஸ்மானியை போலீஸார் விசாரணைக்காக அழைத்திருந்தனர். அப்போது அவர் தனக்கு உடல் நலம் சரியில்லை என்றார். இதையடுத்து போலீஸார் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவரை போலீஸார் சித்திரவதை செய்யவில்லை. அடிக்கவும் இல்லை. ஒரு மணி நேரம் மட்டுமே அவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
அவருக்கு நீண்ட காலமாக ரத்த அழுத்த பிரச்சினை இருந்து வருகிறது. மருந்துகளும் சாப்பிட்டு வருகிறார். கடந்த 3 நாட்களாக அவர் மருந்து உட்கொள்ளவில்லை என்று தெரிகிறது. இதனால்தான் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
அகமதாபாத் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்சல் உஸ்மானி என்பவரின் சகோதரர்தான் இந்த பயஸ் உஸ்மானி.
இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர் அப்சல் உஸ்மானி. 2008ம் ஆண்டு மும்பை குற்றப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். 2008ல் நடந்த குஜராத் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு கார்கள் கொடுத்து உதவியதாக இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications