தமிழகத்தில் 85 வகையான தீண்டாமைக் கொடுமைகள் நிலவி வருகின்றது- ஜி. ராமகிருஷ்ணன்

Subscribe to Oneindia Tamil

G Ramakrishnan
கோவை: தமிழகத்தில் 85 வகையான தீண்டாமைக் கொடுமைகள் நிலவுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

கோவையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதலாவது மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் கலந்து பேசியதாவது

தமிழ்நாட்டில் தற்போது தலித் மக்களுக்கு 18 சதவிகிதமும் பழங்குடியினருக்கு ஒரு சதவீதம் என மொத்தம் 19 சதவீதம் இட ஒதுக்கீடு உள்ளது. ஆனால் மக்கள் தொகை அடிப்படை யில் இந்தப்பங்கீடு போதுமானதல்ல. மொத்தம் 20 சதவீத (19+1) இடஒதுக் கீட்டை அமலாக்க வேண்டும்.

கடந்த திமுக ஆட்சியில் தமிழகத்தின் சமூக கொடுமைகள், தீண்டாமை, மூடப்பழக்க வழக்கங்கள் குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது. அதில் பேராசிரியர் நன்னன், பொன்னம்பல அடிகள், நான் (ஜி. ராமகிருஷ்ணன்) உள்ளிட்ட பலர் இடம் பெற்றோம்.

நான்கைந்து முறையாக பல்வேறு விஷயங்களை விவாதித்த அக் குழு பின்பு என்ன ஆனது என தெரியவில்லை. அரசுக்கும் அறிக்கை ஏதும் அளிக்கவில்லை. எனவே தற்போதைய அதிமுக அரசு மீண்டும் அதே போன்ற ஓர் ஆய்வுக் குழுவை அமைக்க வேண்டும்.

கோவை மாவட்டத்தில் 32 விதமான தீண்டாமை நிலவுவதாக அறிக்கை கூறுகிறது. இதே போல் தமிழகத்தில் 85 வகையான தீண்டாமைக் கொடுமைகள் நிலவுகிறது.

கடந்த 63 ஆண்டுகால இந்திய ஆட்சியாளர்கள் இந்த அவலத்திற்கு முடிவு கட்ட வில்லை. அத்தகைய பணியை செய்து முடிக்க தான் தீண் டாமை ஒழிப்பு முன்னணி போராடி வருகினறது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+