கருணாநிதி செய்த ஒரே அரும்பணி சமச்சீர் கல்வி தான்: நாஞ்சில் சம்பத்

Subscribe to Oneindia Tamil

சங்கரன்கோவில்: முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி தனது ஆட்சியில் செய்த ஒரே அரும்பணி சமச்சீர் கல்வி தான் என்று மதிமுக மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

சங்கரன்கோவில் நகர மதிமுக மாணவரணி சார்பில் கட்சியின் 18-ம் ஆண்டு தொடக்க விழா பொது கூட்டம் நேற்று நடந்தது. மாநில மாணவரணி செயலாளர் டாக்டர் சுப்பராஜ் தலைமை வகித்தார்.

இந்த விழாவில் கலந்து கொண்டு மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது,

ஜனநாயக நாட்டில் தேர்தலை சந்திக்காமல் புறக்கணித்து விட்டு இன்னும் நிலைத்து நிற்கும் கட்சி மதிமுக மட்டும் தான். 2016 சட்டசபை தேர்தல் தான் எங்களது இலக்கு. அப்போது பலர் கணக்கை முடிப்போம்.

தமிழகத்தின் எதிர்கட்சி தலைவராக வைகோ வந்து விடக்கூடாது என்பதற்காக எங்களை ஓரம் கட்டினார் ஜெயலலிதா. ஜனநாயக நாட்டில் எதிர்கட்சி தலைவருக்கு தான் மரியாதை.

சமச்சீர் கல்வி திட்ட செயல்பாட்டில் உள்ள குளறுபடியால் ஒன்றரை மாத காலமாக பள்ளியில் பாடம் படிக்க முடியாமல் மாணவ, மாணவிகள் தவித்து வருகின்றனர். உலக நாட்டில் இதுபோன்ற கொடுமை நடந்ததில்லை.

கருணாநிதி தனது ஆட்சியில் செய்த ஒரே அரும்பணி சமச்சீர் கல்வி தான். இதையே உங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையே. சமச்சீர் கல்வியின் செயல்பாட்டில் ஜெயலலிதா செய்த தவறுக்கு அவர் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும். இது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தத் தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+