ஹிலாரி இன்று சென்னை வருகை-ஜெ.வுடன் இலங்கை குறி்த்து பேச்சு

சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவை ஹிலாரி சந்திக்கவுள்ளார். அப்போது ஹிலாரியிடம் இலங்கை விவகாரம் குறித்து ஜெயலலிதா பேசுவார் என்று தெரிகிறது.
நேற்று டெல்லி வந்த ஹிலாரி, வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணாவுடன் ஆலோசனை நடத்தினார். இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய ஹிலாரி, பயங்கரவாதத்தை எதிர்கொள்வதே முன்னுரிமை அளிக்க வேண்டிய மிக முக்கியமான பிரச்சனை என்பதையே கடந்த வாரம் நடைபெற்ற மும்பை குண்டுவெடிப்புச் சம்பவம் உணர்த்துகிறது.
பயங்கரவாதத் தாக்குதல்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும். பயங்கரவாதம் தொடர்பாக இருநாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயப்பட்டது.
2008ம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெளிப்படையாகவும், முழுமையாகவும், விரைவாகவும் நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் முனைய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்.
பயங்கரவாதத்தை எதிர்கொள்ள இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் பரஸ்பர புரிந்துணர்வு அவசியம். அந்தவகையில், நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக இருநாடுகளும் பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருப்பதை வரவேற்கிறோம் என்றார் ஹிலாரி.
இந் நிலையில் இன்று சிறப்பு அமெரிக்க விமானம் மூலம் சென்னை வரும் ஹிலாரி, நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் நட்சத்திர ஹோட்டலுக்கு வருகிறார்.
பிற்பகலில் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகிறார்.
அங்கிருந்து கோட்டைக்கு செல்லும் ஹிலாரி முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசுகிறார். அப்போது இலங்கையின் போர் குற்றங்கள் குறித்து ஹிலாரியிடம் ஜெயலலிதா விளக்குவார் என்று தெரிகிறது.
இதையடுத்து பெசன்ட் நகரில் உள்ள கலாசேத்ராவில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளை பார்வையிடுகிறார் ஹிலாரி.
இரவு மீண்டும் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தங்கும் அவர் நாளை அமெரிக்கத் தூதரக அதிகாரிகளை சந்தித்து உரையாடுகிறார். இதையடுத்து டெல்லி திரும்புகிறார்.
ஹிலாரி கிளிண்டன் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர் தங்கியிருக்கும் ஹோட்டல் மற்றும் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள் பலத்த பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டிருக்கும் என்று சென்னை நகர போலீஸ் கமிஷனர் திரிபாதி நிருபர்களிடம் தெரிவித்தார்.
ஹிலாரி கிளிண்டனோடு அவருடைய பாதுகாப்புக்காக அமெரிக்க பாதுகாப்பு படை வீரர்களும் 100 பேர் வருகிறார்கள்.
சென்னையில் ஹிலாரி கிளிண்டன் இருக்கும்போது, அவருடைய பாதுகாப்பு அதிகாரியாக துணை கமிஷனர் அஸ்வின் கோட்னீஸ் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிலாரி கிளிண்டன் செல்லும் இடங்களுக்கெல்லாம் அவரது குண்டு துளைக்காத காருக்கு பின்னால் 15 கார்களில் போலீசார் பாதுகாப்பு அரணாக செல்வர்.
அவர் தங்கப்போகும் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் வெடிகுண்டு நிபுணர்கள் நவீன கருவிகளோடு சோதனைகள் நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications