400 கிலோ மீனை பிடித்த நாகை மீனவர்

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டிணம்: நாகை துறைமுகத்திற்கு மீன்பிடித்து திரும்பிய மீனவர் ஒருவர், 400 கிலோ எடையுடைய அரிய வகை மயில் மீன் உடன் கரையேறினார்.

நாகப்பட்டிணம், அக்கரைப்பேட்டையச் சேர்ந்த மாதழகன். மீனவரான அவரது விசைப் படகில், நேற்று 400 கிலோ எடையுடைய மயில் மீன் சிக்கியது. இந்த மீனை கிலோவிற்கு 90 ரூபாய் என்ற விலையில், நாகை வியாபாரி ஒருவர் வாங்கி சென்றார்.

இந்த மீன்னின் சிறப்பு என்ன?

அட்லாண்டிக் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில், 75 மீட்டருக்கும் குறைவான ஆழத்தில் இந்த மயில் மீன்கள் வசிக்கின்றன. "ஹண்ப் சண்ட்" என்று அழைக்கப்படும் இவ்வகை மீன்களுக்கு, மயில்களை போன்ற தோகைகள் இருக்கும்.

கடலில் வாழும் சிறிய வகை மீன்களை உட்கொண்டு வாழும் இவை, பல லட்சம் கி.மீ., தூரம் கடலில் பயணம் செய்து 16 ஆண்டுகள் வரை உயிர் வாழும் தன்மை கொண்டது. இவற்றின் அலகுகள் பறவைகளுக்கு உள்ளது போல் நீண்டு காணப்படும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி கடல் பகுதியில் மீனவர்கள் வலையில் அடிக்கடி சிக்கும், இந்த மீன்கள் 100 கி.மீ., வேகத்தில் நீந்திச் செல்லும் திறன் படைத்தவை. இம்மீன்களில் புரோட்டின் மற்றும் "ஓமேகா-3' என்ற ஆசிட் சத்து அதிகம் உள்ளதால், கிலோ 70 ரூபாயில் இருந்து 100 ரூபாய் விலை நிர்ணயித்து வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். அதிக விலைக்கு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+