அழகிரியை பதவி நீக்கம் செய்ய பண்ருட்டி ராமச்சநதிரன் வலியுறுத்தல்

நில மோசடி, மிரட்டி பணம் பறித்தல் போன்ற வழக்குகளில் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் முக அழகிரி்க்கு நெருக்கமான பொட்டு சுரேஷ், தளபதி, கிருஷ்ணபாண்டி, கொடி சந்திரசேகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பாளையங்கோட்டை சிறைக்கு சென்று மத்திய அமைச்சர் அழகிரி அவர்களை சந்தித்தார். அவரது செயலுக்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் முக அழகிரியை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் நீக்க வேண்டும் என்று தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,
சிறையில் உள்ள தனது கூட்டாளிகளை சந்தித்திருக்கிறார் மத்திய அமைச்சர் முக அழகிரி. அவரது செயல் அந்த கிரிமினல்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையில் குறுக்கிடுவதற்கு சமம். மேலும் இது அதிகார துஷ்பிரயோகமும் ஆகும்.
இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடத்த உறுதி செய்வதற்கு பிரதமர் அழகிரியிடம் இருந்து விளக்க கடிதம் பெற்று அவரை மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications