அதிமுக அரசின் பொய் வழக்குகளைக் கண்டித்து ஆகஸ்ட் 1ல் அறப்போராட்டம்- திமுக
சென்னை: அதிமுக அரசு தங்களது கட்சியினர் மீது போட்டு வரும் பொய் வழக்குகளை நிறுத்தக் கோரியும், அதைக் கண்டித்தும் ஆகஸ்ட் 1-ம் தேதி அறப் போராட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது.
அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் நில அபகரிப்பு, நில ஆக்கிரமிப்பு, வீடு அபகரிப்பு ஆகிய முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த வழக்குகளில் பெரும்பாலும் திமுகவினரே சிக்குகின்றனர்.
நில மோசடி வழக்குளில் மத்திய அமைச்சர் அழகிரியின் ஆதரவாளர்களான அட்டாக் பாண்டி, பொட்டு சுரேஷ், தளபதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஸ்.ஆர். கோபி தாய்லாந்துக்கு தப்பிவிட்டார்.
இது தவிர நில அபகரிப்பு புகாரில் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் அவரது சகோதர் மீது நில அபகரிப்பு புகார் கூறப்பட்டுள்ளது. இது போன்ற வழக்குகளில் திமுகவினர் சிக்கி வருகின்றனர்.
திமுகவினர் மீது வேண்டும் என்றே, பழி வாங்கும் நோக்கில் பொய்யான வழக்குகளைத் தொடர்வதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. எனவே, இதற்கு காரணமான அதிமுக தலைமையிலான அரசை கண்டித்து வரும் ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் அறப் போராட்டம் நடத்தப்போவதாக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications