மரப் பெட்டியில் கிடந்த சிறுவன் பிணம்-ஓரினச்சேர்க்கைக்குப் பின் கொல்லப்பட்ட கொடூரம்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மாவட்டம் கிழவேனரி கிராமத்தில் 8 வயது சிறுமின் பள்ளிக்கூடத்தில் இருந்த மரப்பெட்டிக்குள் பிணமாக கிடந்த சம்பவத்தில் அதிர்ச்சித் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த சிறுவனை கட்டாயப்படுத்தி, மிரட்டி ஐந்து சிறுவர்கள் ஓரினச்சேர்க்கை உறவை மேற்கொண்டு பின்னர் சிறுவனை கழுத்தை நெரித்துக் கொலை செய்து பெட்டிக்குள் போட்டது தற்போது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கிழவனேரியில் உள்ள பஞ்சாயத்துப் பள்ளிக்கூடத்திற்குள் இருந்த பெட்டிக்குள் சிறுவன் ஜெயசூரியா பிணமாக கண்டெடுக்கப்பட்டது அந்தக் கிராமத்தை அதிர்ச்சி அடைய வைத்தது. முதலில் சிறுவன் சக நண்பர்களோடு ஒளிந்து விளையாடியிருக்க வேண்டும். அப்போது எதிர்பாராதவிதமாக பெட்டி மூடிக் கொண்டதால் அவன் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

ஆனால் தற்போது பிரேதப் பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுவன் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளான். அதற்கு முன்பாக அவனை ஐந்து பேர் சேர்ந்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தியுள்ளதும் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஐந்து பேர் செய்து இந்தக் கொடுமையை செய்துள்ளனர். அனைவரும் அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள்தான். இவர்கள் அனைவரும் பள்ளிக்கூடத்திற்குப் பின்பு கூடி குடிப்பது, புகை பிடிப்பது என பொழுதைப் போக்குவது வழக்கம். இந்த ஐந்து பேரும் 19 வயதைக் கூட தாண்டாதவர்கள்.

ஜூலை 16ம் தேதி மாலை நாலரை மணியளவில் ஜெயசூர்யா தனது நண்பர்களோடு கண்ணாமூச்சி விளையாடுவதை இந்தக் கும்பல் பார்த்துள்ளது. அப்போது ஜெயசூர்யாவை அவர்கள் பிடித்துப் பள்ளி பாத்ரூமுக்குக் கொண்டு போய் வலுக்கட்டாயமாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தியுள்ளனர். ஐந்து பேரும் தங்களது வெறித்தனத்தைத் தணித்துக் கொண்ட பின்னர் சிறுவனைப் பார்த்தபோது அவன் நினைவிழந்து கிடந்தான்.

அவனை அப்படியே விட்டுச் சென்றால் தங்களைக் காட்டிக் கொடுத்து விடுவான் என்பதால் ஐந்து பேரும் சேர்ந்து அவனது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர் மரப் பெட்டியல் போட்டு விட்டுத் தப்பி விட்டனர் என்றார்.

போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் இந்த ஐந்து பேரும் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் செய்த குற்றத்தை ஐவரும் ஒத்துக் கொண்டனர்.

இவர்கள் குறித்து கிராம மக்களிடமும், பள்ளிக்கூட அதிகாரிகளிடமும் போலீஸார் விசாரித்தபோது இவர்கள் இதுவரை யாரிடமும் செக்ஸ் குற்றம் புரிந்ததாக தெரியவில்லை என்று கூறினர். அதேசமயம், இவர்கள் ஐந்து பேரும் தங்களுக்குள் ஓரினச்சேர்க்கை உறவில் ஈடுபடுவது வழக்கம்தான் என்று கூறியுள்ளனர்.

ஐந்து பேரையும் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காப்பகத்தில் அடைக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+