2.20 ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாக சோழவந்தான் அதிமுக எம்.எல்.ஏ. மீது புகார்

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர் மீனாம்பாள் (64). இவர் மதுரை மாவட்ட எஸ்.பி. ஆஸ்ரா கார்க்கிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.
அதில்,
எனக்கு மதுரை மாவட்டம் வாவிடைமருதூரில் 2 ஏக்கர் 20 சென்ட் நிலம் உள்ளது. இதை சின்னம்மாள் என்பவர் கவனித்து வருகிறார்.
இதை விற்பதற்காக வில்லங்க சான்றிதழ் மற்றும் பத்திரங்களை புரோக்கர்களிடம் கொடுத்தேன். அவர்கள் இந்த இடம் குறித்து வில்லங்கம் போட்டு பார்த்தனர்.
அப்போது, எனது நிலத்தை வாவிடமருதூரைச் சேர்ந்த ஹரிஹரன் பவர் ஏஜென்ட்டாக இருந்து, மதுரை கிருஷ்ணாபுரம் காலனி கண்ணன் மற்றும் திருமங்கலம் ஜெயச்சந்திரனுக்கு தலா 45 சென்ட் விற்றுள்ளது தெரிய வந்தது.
இந்த நிலத்தை அபகரிக்கும் வகையில், சோழவந்தான் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கருப்பையா, சின்னம்மாள், ஹரிஹரன், கண்ணன், ஜெயச்சந்திரன், தலையாரிகள் சடாச்சரம், தமிழன் ஆகியோர் ஆள்மாறாட்டம் செய்து பவர்பத்திரம் தயார் செய்து செயல்பட்டுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு மீது உரிய விசாரணை நடத்த மதுரை எஸ்.பி. உத்தரவிட்டார்.
புதிய அதிமுக அரசு பதவியேற்றது முதல் திமுகவினர் மீது தான் நில மோசடி புகார் எழுந்து வந்தது. ஆனால், தற்போது அதிமுகவினர் மீதும் இந்த நில அபகரிப்புப் புகார்கள் புற்றீசல் போலக் கிளம்பியுள்ளது. நேற்று முன்தினம்தான் தமிழக வ்ணிகவரித்துறை அமைச்சர் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி மீது நில மோசடி புகார் எழுந்தது.
இந்த நிலையில் சோழவந்தான் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மீதும் புகார் கிளம்பியுள்ளதால் ஆளுங்கட்சி வட்டாரம் சங்கடத்தில் தவிக்கிறது.
-
2026 சட்டமன்றத் தேர்தல்: 'தொண்டை கட்டியிருக்கு...' - கனிமொழியின் அந்தப் பதில்! என்னதான் நடக்கிறது? -
+2 மாணவி கொலை சம்பவம்.. 2 நாட்களாக போராடுகிறோம்.. உடனே ஏன் வரலை.. கனிமொழியை கேட்ட உறவினர்கள்! -
ரஞ்சனா நாச்சியார் ஒயிட் பேப்பர் காட்டி விஜய்யை அலற விட்டாரே? ராமநாதபுரம் திமுகவுக்கு அதிர்ஷ்டம்தான் -
சபரீசன் கையில் விரைவில் திமுக.. அப்படியே ஆந்திரா ஸ்டைல்.. அணுகுண்டை வீசிய அஇஅதிமுக உதயகுமார் -
அண்ணா ஆட்சி ஏன் சிறப்பு? என்ன சாதித்தார் அவர்? 1967க்கு பிறகான தரமான சம்பவங்கள் இதோ..! -
முடிவுக்கு வராத காங்கிரஸ் - திமுக சீட் ஷேரிங் பிரச்னை.. காங். தேர்வு செய்யும் 28 தொகுதிகளால் சிக்கல் -
அரசியல் வரலாறு: உலகத் தமிழ் மாநாட்டில் ஊழல்? அண்ணா மீது புகார்! சட்டசபையில் நடந்த காரசார விவாதம்! -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
Dindigul: திண்டுக்கல் தொகுதியில் யாருக்கு வாய்ப்பு? திமுகவில் ஆர்வம் காட்டும் புதுமுகங்கள்! -
தமிழக தேர்தல் வரலாறு: கருணாநிதிக்கு உதயசூரியன்.. நெடுஞ்செழியனுக்கு சேவல்.. திமுகவின் முதல் சம்பவம்! -
7 கேட்ட மதிமுக.. 5க்கு குறைத்த திமுக.. தனிச்சின்னமும் கிடையாது.. வைகோவிடம் நேரடியாக சொன்ன ஸ்டாலின்! -
Election Exclusive: இன்னும் என்ன பண்றீங்க..கோபத்தில் கண் சிவந்த ஸ்டாலின்! இன்னைக்குள்ள முடிங்க.. சுறுசுறுப்பான சீனியர்ஸ்












Click it and Unblock the Notifications