நெருங்கியது தீபாவளி பண்டிகை: ரயில் டிக்கெட் முன்பதிவு 24-ம் தேதி துவக்கம்
நாகர்கோவில்: தீபாவளிப் பண்டிகை அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள நிலையில் அதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வருகிற 24ம் தேதி முதல் தொடங்குகிறது.
தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 26-ம் தேதி புதன்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ரயில்களில் முன்பதிவு செய்ய பலரும் முன்கூட்டியே தயாராவது வழக்கம். தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கும் இயக்கப்படும் ரயில்களில் எப்போதுமே கூட்டம் நிரம்பி வழியும்.
டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அத்தனையும் விற்றுத் தீர்ந்து விடும். இதனால் பயணிகள் பெரும் ஏமாற்றத்தை சந்திப்பதும், சிறப்பு ரயில்கள் விடுவதும் தொடர் கதையாகி விட்டது.
இந்த நிலையில், தீபாவளிக்கு முன்னதாக வருகின்ற சனி, ஞாயிறு விடுமுறை நாட்களையும் கருத்தில் கொண்டு அக்டோபர் 21-ம் தேதி வெள்ளிக்கிழமை புறப்படுகிறவர்கள் வரும் 24-ம் தேதியில் இருந்து முன்பதிவு செய்யலாம். இதனால் வரும் நாட்களில் டிக்கெட் கவுன்டர்களில் கூட்டம் அலைமோதும் என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications