சென்னை கேஎம்சி மருத்துவமனையில் திடீர் தீ: 3 நோயாளிகள் பலி
சென்னை: கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் 3 நோயாளிகள் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. இதற்கு அப்பிரிவில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் மின் கசிவு ஏற்பட்டது தான் காரணம் என்று கூறப்படுகிறது.
தீ பற்றியவுடன் தீவிர சிகிச்சைப் பிரிவு முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதில் பூந்தமல்லி, செந்நீர்குப்பத்தைச் சேர்ந்த தமிழரசி, கொடுங்கையூர், எருக்கஞ்சேரியைச் சேர்ந்த கிருஷ்ணா பாய் மற்றும் அம்பத்தூரைச் சேர்ந்த நந்தகோபால் என்னும் 3 நோயாளிகள் மூச்சு திணறி பரிதாபமாக உயிர் இழந்தனர்.
மேலும் தீயின் தாக்கத்தால் 6 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீவிர சிகிச்சைப் பிரிவு முழுவதும் புகை பரவியதால் நோயாளிகளை மருத்துவர்களோ, செவிலியர்களோ சென்று காப்பாற்ற முடியவில்ல. தீயணைப்பு வீரர்கள் வந்து தான் நோயாளிகளை வெளியேற்றினர்.












Click it and Unblock the Notifications