மும்பை குண்டுவெடிப்பு- முக்கிய குற்றவாளி நேபாளத்தில் கைது
காத்மாண்டு: கடந்த 13ம் தேதி மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நேபாள நாட்டைச் சேர்ந்த ஒருவரை அந்த நாட்டு போலீசார் காத்மாண்டுவில் கைது செய்துள்ளனர்.
நேபாளத்தின் சர்லஹி மாவட்டத்தைச் சேர்ந்த முகம்மத் ஷகீர் (40) என்பவர் உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேபாள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் அமைந்துள்ள பலுவதார் பகுதியில் வாடகைக்குக் குடியிருந்த இவரின் செயல்பாடுகள் சந்தேகப்படும் வகையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
மும்பை குண்டுவெடிப்புகள் தொடர்பாக இவர் தொலைபேசியில் பேசியதும், எஸ்எம்எஸ் அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜாகீர் கடந்த வாரமே கைது செய்யப்பட்டு விட்டார். எனினும் அந்த செய்தி ரகசியமாக வைக்கப்பட்டு இப்போது தான் வெளியில் கசிந்துள்ளது.
மும்பையில் நடந்த குண்டுவெடிப்புகளில் 24 பேர் பலியானதும், 129 பேர் படுகாயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications