பிரதமரை குறைகூறிய ஆ. ராசாவின் கொடும்பாவியை எரிக்க முயன்ற தங்கபாலு ஆதரவாளர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2ஜி ஊழல் வழக்கில் பிரதமர் மன்மோன் சிங் மீது குற்றம்சாட்டியதை கண்டிக்கும் வகையில் சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி.தங்கபாலுவின் ஆதரவாளர்கள் ஆ. ராசாவின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர்.

2ஜி வழக்கி்ல் கடந்த திங்கட்கிழமை அன்று தனக்காக வாதாடிய ஆ. ராசா பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோர் மீது குற்றம்சாட்டினார்.

இதற்கு கண்டனம் தெரிவிக்க சத்தியமூர்த்தி பவன் முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி.தங்கபாலுவின் ஆதரவாளர்கள் ஆ. ராசாவின் உருவபொம்மையை எரிக்கப் போவதாக அறிவித்தனர்.

அறிவித்தபடி நேற்று காலை 11 மணிக்கு கே.வி.தங்கபாலுவின் தீவிர ஆதரவாளர் சபீர் தலைமையில் சுமார் 25 பேர் ஆ. ராசாவின் உருவபொம்மையோடு வந்தனர்.

அதன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைக்கும் நேரத்தில் சபீரின் போன் ஒலித்தது. எடுத்தால் மறுமுனையில் தலைவர் தங்கபாலு. உருவ பொம்மையை எரித்தால் கூட்டணிக்கு பிரச்சனையாகிவிடும் அதனால் எரிக்கவேண்டாம் என்றார்.

தலைவரின் வார்த்தைகளை அங்கு கூடியவர்களிடம் சபீர் தெரிவித்தார். இதையடுத்து உருவபொம்மை எரிப்பு கைவிடப்பட்டது. இதற்கிடையே ஆ. ராசாவின் உருவ பொம்மையை தங்கபாலு ஆதரவாளர்கள் எரிக்கப்போவதாக தகவல் அறிந்த பத்திரிக்கையாளர்கள் சத்தியமூர்த்தி பவன் மூன்பு கூடிவிட்டனர்.

கட்சி்க்காரர்கள் பத்தரிக்கையாளர்கள் கண்ணில் படாமல் உருவபொம்மையை ஒரு முள்புதருக்குள் வீசினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+