கர்நாடகத்தின் அடுத்த முதல்வர் யார்?-சதானந்த கெளடாவுக்கு வாய்ப்பு!

இதனால் பலருடைய பெயர்கள் போட்டிக் களத்தில் உள்ள போதிலும் கெளடாவுக்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
எதியூரப்பா பதவி விலகி விட்டார். இதையடுத்து அடுத்த முதல்வர் யார் என்பது பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் அனந்தக்குமார், மாநில பாஜக தலைவர் ஈஸ்வரப்பா, உடுப்பி எம்.பி. சதானந்த கெளடா, அமைச்சர் ஷோபா கரந்லஜே, அமைச்சர் சுரேஷ் குமார், அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் ஆகிய ஆறு தலைவர்களின் பெயர்கள் போட்டிக்களத்தில் உள்ளன.
இவர்களில் ஈஸ்வரப்பா, எதியூரப்பாவின் ஆதரவாளர் ஆவார். ஜெகதீஷ் ஷெட்டர் தீவிர எதியூரப்பா எதிர்ப்பாளர். ஷோபா எதியூரப்பாவின் தீவிர ஆதரவாளர். அனந்த்குமார் மேலிடத்து செல்வாக்கைப் பெற்றவர். சுரேஷ் குமாருக்கு அடிமட்ட பாஜகவினரிடம் நல்ல பெயர் உள்ளது.
இருப்பினும் தனக்கு அடுத்து கெளடாவைத்தான் முதல்வராக்க வேண்டும் என எதியூரப்பா நிபந்தனை விதித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. கெளடா முன்னாள் மாநில பாஜக தலைவர் ஆவார். இவருக்கு கட்சி எம்.எல்.ஏக்கள் மத்தியில் ஆதரவு உள்ளதா என்பது தெரியவில்லை. அதேசமயம், ரெட்டி சகோதரர்கள் கெளடாவை விரும்பவில்லை என்று தெரிகிறது.
இருப்பினும் தேவையில்லாத சர்ச்சைக்குள் போகாதவர் கெளடா என்ற பெயர் கட்சியில் உள்ளது. அனைத்து்த தரப்பினரையும் அனுசரித்துப் போகக் கூடியவர் என்ற பெயரும் இவருக்கு உண்டு. எனவே கெளடாவை, எதியூரப்பா ஆள் என்று பார்க்காமல் அனைத்துத் தரப்பினரும் ஏற்கக் கூடும் என்றும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications