சென்னை- அட்டை பெட்டிக்குள் வைத்து எறியப்பட்ட குழந்தை மீட்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: அட்டை பெட்டியில் அடைக்கப்பட்டு கிடந்த பிறந்து மூன்று நாட்களான பெண் குழந்தையால், சென்னை திருவான்மியூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவான்யூர், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது "ரமணியம் கேலக்சி' என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பு. நேற்றுமுன்தினம் இங்கு இரவு காவலர் பணிக்கு வந்த வெங்கடேஷ், வழக்கம் போல் குடியிருப்பை சுற்றிலும் நடந்தார்.
அப்போது, குடியிருப்பின் கழிவறையின் அருகில் இருந்து குழந்தை அழும் குரல் கேட்டது. சத்தம் கேட்ட பகுதிக்கு சென்று பார்த்த போது, கழிவறையின் அருகே, ஒரு அட்டைப் பெட்டிக்குள், பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை உயிருடன் இருந்தது.
வெங்கடேஷ் கொடுத்த தகவலின் பேரில், திருவான்மியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, குழந்தையை மீட்டனர். குழந்தையின் பெற்றோர் குறித்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications