ஆகஸ்ட் 3ம் தேதி லோக்பால் மசோதா தாக்கல்
டெல்லி: ஊழலில் ஈடுபடுவோரை தண்டிக்க வகை செய்யும் 'லோக்பால்' மசோதா வரும் ஆகஸ்ட் 3ம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என, பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் நேற்று அறிவித்தார்.
இதுகுறித்து, அமைச்சர் பவன்குமார் பன்சால் கூறுகையில், "ஆகஸ்ட் முதல் வாரத்தில் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய பணிகள் நடந்து வருகிறது. ஆகஸ்ட் முதல் தேதி பாராளுமன்றத்தில் மழைக்கால கூட்டத் தொடர் துவங்குவதால், 2 அல்லது 3ம் தேதி மசோதா தாக்கல் செய்யப்படலாம். அடுத்த மாதம் இறுதிக்குள் பாராளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வு முடிந்தால், நடப்பு மழைக்கால கூட்டத் தொடரின் இறுதிக்குள் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.
மொத்தம் 22 நாட்கள் நடக்க உள்ள இந்த கூட்டத் தொடரில், 35 மசோதாக்களும், லோக்பால் தவிர பல முக்கிய சட்டங்களும் தாக்கல் செய்யப்படுகிறது. தெலுங்கானா விவகாரத்தில் எம்.பி.க்களின் ராஜினாமா குறித்து, சபாநாயகரே முடிவெடுப்பார்.
தற்போதைய லோக்பால் மசோதாவை குறை கூறிவரும் அன்னா ஹசாரே உள்ளிட்டோர், மற்றவர்களின் கருத்துகளை மதிக்க வேண்டும். எந்த பிரச்சனைக்காகவும் பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை", என்றார்.
நேற்றுமுன்தினம் ஒப்புதல் அளிக்கப்பட்ட லோக்பால் மசோதாவில், அன்னா ஹசாரே தலைமையிலான சமூக ஆர்வலர் குழுவின் கருத்துகளை மத்திய அரசு ஏற்கவில்லை. எனவே, வலுவான லோக்பால் மசோதா கொண்டு வர கோரி, ஆகஸ்ட் 16ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க போவதாக அன்னா ஹசாரே அறிவித்துள்ளார். ஆனால், அதற்கு டெல்லியில் தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications