ஆதர்ஷ் ஊழல்: மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவிடம் சிபிஐ விசாரணை

சுஷில் குமார் ஷிண்டே மகாராஷ்டிரா முதல்வராக இருந்தபோது தான் ஆதர்ஷ் குடியிருப்பு ஆவணங்கள் கையெழுத்தாகின.
மும்பையில் இருந்து ஒரு சிபிஐ அதிகாரிகள் குழு நேற்றிரவு டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றது. அந்த குழு ஆதர்ஷ் ஆவணங்கள் குறித்து இன்று ஷிண்டேவிடம் விசாரணை நடத்தியது.
ஆதர்ஷ் குடியிருப்பில் 40 சதவீத வீடுகளை ராணுவத்தினர் அல்லாதவர்களுக்கு கொடுக்குமாறு அப்போதைய வருவாய் துறை அமைச்சர் அசோக் சவான் பரிந்துரைத்தார். அதற்கு அப்போதைய முதல்வர் ஷிண்டே ஒப்புதல் அளித்தார். இதில் விந்தை என்னவென்றால் கார்கில் போரில் வீரமரணமடைந்த தியாகிகளின் குடும்பத்தினருக்காக கட்டப்பட்டது தான் ஆதர்ஷ் குடியிருப்பு.
ஷிண்டே தவிர மகாராஷ்டிரா முதல்வராக இருக்கையில் ஆதர்ஷ் ஆவணங்களை கையாண்ட மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கிடமும் சிபிஐ விசாரணை நடத்தவுள்ளது.
விலாஸ்ராவ் தேஸ்முக்கிற்கு அடுத்து மகாராஷ்டிரா முதல்வராகி ஆதர்ஷ் விவகாரம் தொடர்பாக பதவி விலகிய அசோக் சவான் உள்பட 14 பேர் மீது சிபிஐ கடந்த ஜனவரியில் வழக்கு பதிவு செய்துள்ளது.
ஆதர்ஷ் ஊழலில் தேஸ்முக்கிற்கும், ஷிண்டேவுக்கும் தொடர்பு இருப்பதாக எந்த சாட்சியங்களும் இல்லை என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ கடந்த மே மாதம் தெரிவி்த்தது.
கார்கில் தியாகிகள் குடும்பத்திற்காக 6 மாடிக் கட்டிடமாக கட்ட வேண்டியது 31 மாடி வரை கட்டப்பட்டது. அதுவும் விதிமுறைகளை மீறி பாதுகாப்பு அமைச்சகத்தின் இடத்தில். இந்த விவகாரத்தில் இதுவரை பல உயர் அதிகாரிகளிடம் விசராணை நடத்தப்பட்டுள்ளது.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications