கோவையில் லிப்டில் சிக்கி 4 வயது சிறுமி பலி

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள லிப்டில் சிக்கி 4 வயது சிறுமி பரிதாபமாக பலியாகினார்.

கோவை ரங்கே கவுடா தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர் லகேந்தா குமார் 32). காட்டூரில் மின்சார உதிரிபாகங்கள் கடை வைத்துள்ளார். அவரது மனைவி சவீதா. அவர்களுக்கு காஷிஷ் 6), ஷாவிநாகர் (4) என்னும் 2 குழந்தைகள்.

கடந்த சனிக்கிழமை ஷாவிநாகர் தனது வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். திடீர் என்று அவரைக் காணவில்லை. உடனே அவரது குடும்பத்தினர் குழந்தையைத் தேடினர். அப்போது தான் குழந்தை லிப்டுக்குள் சிக்கியிருப்பதைக் கண்டுபிடித்தனர்.

3-வது மாடியில் விளையாடிய ஷாவிநாகர் லிப்டின் முன்பக்க கதவைத் திறந்து உள்ளே சென்றுள்ளார். ஆனால் அவரால் அடுத்துள்ள கிரில் கதவைத் திறக்க முடியவில்லை. அதற்குள் முன்பக்க கதவு மூடிக் கொண்டது. லிப்டும் அடுத்த மாடிக்கு சென்றுவி்ட்டதால், ஷாவிநாகர் இடையே மாட்டிக் கொண்டார்.

குழந்தை சிக்கியிருப்பதை பார்த்த உறவினர் லிப்டின் முன்பக்க கதவை உடைத்தார். அங்கு மயங்கிய நிலையில் இருந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

குழந்தை வழியிலேயே இறந்துவிட்டதாக அதை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த அடுக்குமாடி குடியிருப்பே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+