திமுக அறப்போராட்டத்தில் பங்கேற்காமல் டெல்லி சென்ற அழகிரி

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில்தான் தங்கியிருந்தார் அழகிரி. திமுக செயற்குழு, பொதுக் குழுக் கூட்டங்களில் கலந்து கொண்டார். சேலம் போய் வீரபாண்டி ஆறுமுகத்தைப் பார்த்து ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று நடந்த திமுக அறப் போராட்டத்தில் அழகிரியும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவருடைய முக்கியத் தளபதிள் கிட்டத்தட்ட அத்தனை பேருமே கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தனியாக விடப்பட்டுள்ள அழகிரி இன்றைய போராட்டத்தில் பங்கேற்க வரவில்லை. மாறாக வீட்டிலேயே இருந்தார்.
பின்னர் பிற்பகலில் அவர் மதுரையிலிருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்க அவர் செல்வதாக கூறப்பட்டது. அவருடன் மனைவி காந்தியும் உடன் சென்றார்.
அழகிரி போராட்டக் களத்திற்கு வராததால் மதுரை திமுகவினர் ஏமாற்றமடைந்தனர்.












Click it and Unblock the Notifications