Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சட்டீஸ்கர் முதல்வரின் விமானத்தில் திடீர் கோளாறு-அவசரமாக தரையிறக்கம்

Subscribe to Oneindia Tamil

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநில முதல்வர் சென்ற தனி விமானம் திடீரென தரையறக்கப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

சட்டீஸ்கர் மாநிலம் ராய்கரில், அரசு விழா ஒன்று நடந்தது. இதில் கலந்து கொள்ள மாநில முதல்வர் ரமன்சிங், அமைச்சர்கள் பிரிஜ்மோகன் அகர்வால், ராம்விசார் நிதம், புன்னுலால் மோஹிலி உட்பட 8 பேர் தனி விமானத்தில் விழாவிற்கு சென்றனர்.

விழா முடிந்து, அதே விமானம் மூலம் ராய்ப்பூர் திரும்ப, ராய்காரில் உள்ள ஜிந்தால் விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து 8 பேருடன் புறப்பட்ட விமானத்தில் உள்ள ஹைட்ராலிக் கருவியில் கோளாறு ஏற்பட்டது. இதனால், விமானத்தின் சக்கரங்களை உள்ளிழுக்க முடியவில்லை.

இதை உடனடியாக கண்டுபிடித்த விமானி, முதல்வர் ரமன்சிங் மற்றும் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். அதன்பின், விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது.

விமானம் புறப்பட்ட சற்று நேரத்தில் தரையிறக்கப்பட்டதால், 5 மணிநேர தாமதாக மற்றொரு விமானம் மூலம் முதல்வர் உட்பட அனைவரும் ராய்ப்பூர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

விமானத்தில் ஏற்பட்ட கோளாறு உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டதால், பெரும் விபத்து அபாயம் தவிர்க்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+